Saturday, 11th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பட்டணம் சாலை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தில் சனிப்பெயர்ச்சியை
முன்னிட்டு நவக்கிரகங்களில் உள்ள சனீஸ்வர பகவானுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றன.
முன்னதாக சனீஸ்வர பகவானுக்கு பால்,தயிர்,திருமஞ்சனம்,மஞ்சள், சந்தனம் தேன் பஞ்சாமிர்தம் இளநீர்,பன்னீர், அரிசி மாவு, கரும்புச்சாறு, சொர்ண அபிஷேகம் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது.
திரளான பக்தர்களுக்கு கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
சிறப்பு அலங்காரத்தை ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயம் அர்ச்சகர் எம். சிவபெருமாள், பெ.நவீன் குமார் மற்றும் ஸ்ரீ சக்தி விநாயகர் நிர்வாகக் குழுவினர் நவக்கிரகங்களில் ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு செய்துள்ளார்.